×

அரிச்சல்முனையில் மூவர்ண தோரணங்கள் கட்டி தேர்தலில் வாக்களிக்க விழிப்புணர்வு

ராமேஸ்வரம், ஏப்.3: நாட்டின் எல்லை கோடியான ராமேஸ்வரம் அரிச்சல்முனையில் தேர்தல் விழிப்புணர்வு போர்டு வைக்கப்பட்டது. ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட தேர்தல் குழு 100% வாக்குப்பதிவு செய்ய பல்வேறு விழிப்புணர்வு விளம்பரங்களை பொது இடங்களில் வைத்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நாட்டின் எல்லை கோடியான ராமேஸ்வரம் அரிச்சல்முனை ரவுண்டானா பகுதியில் மூவர்ண தோரணங்கள் கட்டி ‘பெஸ்டிவல் ஆப் டெமாக்ரசி’ போர்டு வைத்து அதில் தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம் என்கிற விழிப்புணர்வு வாசகங்களும் இடம் பெற்றன.

மேலும் புதிய வாக்காளர்கள் வாக்குப்பதிவு குறித்து அறியும் வகையில் ஓட்டுப்பதிவு மற்றும் விவிபேட் இயந்திரத்தின் செயல்பாடுகள் ஸ்டிக்கர் போர்டாக சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. ராமேஸ்வரம் அரிச்சல்முனைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வைக்கப்பட்டிருந்த தேர்தல் விளம்பரம் முன்பு நின்று புகைப்படம் எடுத்துச் சென்றனர். திருவிழா போன்று மூவர்ண தோரணங்களுடன் வரவேற்ற தேர்தல் விளம்பரங்களை சுற்றுலா பயணிகள் அனைவரும் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

The post அரிச்சல்முனையில் மூவர்ண தோரணங்கள் கட்டி தேர்தலில் வாக்களிக்க விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Arichalmunya ,Rameswaram ,Ramanathapuram Lok Sabha ,election committee ,
× RELATED இலங்கையில் இருந்து அரிச்சல்முனைக்கு...